Thursday, July 30, 2015

கனவுகளை விதைத்த ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி

தங்களுக்கு விஞ்ஞானி, ஜனாதிபதி, கவிஞர், ஆசிரியர் மற்றும் இன்னும் பல அடையாளங்கள் இருந்தும் ஆசிரியர் என்ற அடையாளத்தால் அறிய  படுவதையே உங்களின் விருப்பமாக இருந்தது. ஆதலாலே இந்த தலைப்பும்..............

எழுபதுகளின் இரண்டாம்பாதிக்கு மேல் பிறந்தவர்களுக்கு நல்ல தலைவன் என்பவன் வரலாற்று பக்கங்களில் படித்த ஒரு விசயமாகவே இருந்தது. ஆம் காமராஜ், காந்தி போன்றோர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்தது இல்லை, ஆனால் நீங்கள் இருக்கும் வரை அறிந்திருக்கவில்லை அவர்களுக்கு ஒப்பான ஒரு தலைவருடன் வாழ்ந்திருக்கிறோமென்று. இதுவரை எவ்வளவவோ பிடித்த அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள், சினிமா பிரபலங்களின் இறப்பு செய்திகளை கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் ஜூலை 27' 2015 இரவு வந்த அந்த செய்தி மட்டும் நமக்கு மிகவும் நெருங்கிய அல்லது வெகு நாள் பழகிய ஒருவரை இழந்ததாகவே தோன்றுகிறது.

போர் விமானி ஆக விருப்ப பட்டீர்கள், நல்ல வேலை அன்று அந்த வேலை உங்களுக்கு கிடைக்கவில்லை, இல்லையென்றால் விண்வெளியில் இந்தியாவுக்கு இவ்வளவு வெற்றிகள் சாத்தியபட்டிருக்குமே என்பது சந்தேகமே. இல்லையில்லை அன்று நீங்கள் போர் விமானி ஆகி இருந்தால், இன்று இந்திய விமான படை உலகின் தலைசிறந்த ஒரு விமான படையாக இருந்திருக்கும்.

ஆம், இந்திய குடியரசின் அதிக அதிகாரம் இல்லாத அதி உயர்ந்த பதவி, ஐந்து வருட ஜனாதிபதி பதவி; யாரும் அறிந்திருக்கவில்லை உங்களால் அப்பதிவியும் அலங்கரிக்க படும் என்றும். இன்றும் அந்த ஐந்து வருடமே(2002 - 2007) அப்பதவிக்கு அளவுகோளாக பார்க்கபடுகிறது. அரசியலமைப்பில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் செய்திடவில்லை(அப்படி ஒன்றும் செய்திடவும் முடியாது, அப்பதவியால்), ஆனால் இந்த பதவியை உங்கள் குறிக்கோளுக்கு படிக்கட்டாய் பயன் படுத்தி கொண்டீர். தெளிவான ஒரே குறிக்கோள், அதை அடைய ஒரே வழி; வளர்ந்த நாடாக இந்தியா, அதை சாத்திய படுத்துபவர்கள் இளைஞர்கள்..........இது தான் அந்த குறிக்கோளும் அதை அடைய நீங்கள் கண்டுபிடித்த வழியும். ஜனாதிபதியாய், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் குழந்தைகள், இளைஞர்களுக்கு அறிவுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் வழியாக வல்லரசு இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தீர்கள். அப்பதவிக்காலம் முடிந்த பின்னும் ஆசிரியராய் தொடர்ந்து இப்படியும் கூட வாழ முடியுமா என்று எண்ண வைத்தீர்கள். ஜனாதிபதியாய் சந்தித்த மாணவர் எண்ணிக்கையை விட அதற்கு பிறகு சந்தித்த மாணவர் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு தருணத்தில் மாணவர்களுடன் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போது உங்கள் இறப்பும் ஒரு தனிதத்துவம் படைத்தது.

ஐரோப்ப யூனியன் பார்லிமென்ட்டில் பேசிய உரை, திருப்பதி திருத்தலத்தில் இந்தியாவிற்கே அர்ச்சனை செய்தது, வெற்றிகளில் சிறந்த வெற்றியாக போலியோ பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் இடை குறைந்த செயற்கை கால்களை வடிவமைத்ததை சொல்வது. சாகும் நிமிடங்களுக்கு சில மணித்துளிகள் முன்னர் கூட உங்களுக்காக ஆயுதம் ஏந்தி நின்று கொண்டே பயணம் செய்த காவலருக்கு நன்றி சொன்னது. இவ்வாறு பல நிகழ்வுகள், இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

தலைவன் ஆவதற்க்காகவே கட்சி ஆரம்பிக்கும் இந்நாட்டில் நூறு கோடி மக்களாலும் தலைவனாக ஏற்று கொள்ள பட்ட ஒரே தலைவர் அதுவும் எந்த ஒரு கட்சி அல்லது இயக்கம் சாராதவர். ஒரு பஸ் எரிப்பு இல்லை, கல் எறிதல் இல்லை, எந்த ஒரு அசம்பாவிதம் இல்லை, வலுகட்டாய கடை அடைப்பு இல்லை.........இந்தியாவில் இதுவே முதல் முறை இப்படியொரு இறுதி பயணம்(மேற் சொன்ன காந்தி காமராஜரின் மறைவுகள் கூட சில அசம்பாவித சம்பவங்களை பதிவு செய்திருக்கிறது). மாறாக, சிறப்பு பேருந்துகள் இயக்க பட்டன, சில இலவச பேருந்துகளும் கூட இயக்கப்பட்டன. ஏன், இந்த இறுதி ஊர்வலத்தை பார்த்து சில அரசியல் தலைவர்கள் கூட கனவு காண ஆரம்பித்திருப்பார்கள் தங்கள் இறுதி பயணமும் இது மாதிரி இருக்க வேண்டுமென்று. சாமானியனை மட்டுமல்ல தலைவர்களையும் கனவு காண வைத்த இந்த பயணம், உங்கள் கனவு மெய்பதுவதற்கு சிறந்த எடுத்துகாட்டு. நீங்கள் நினைத்த வல்லரசு இந்தியாவுக்கு அடித்தளம் அமைந்து விட்டது, இனி உங்களின் விதைகள் விருட்சமாக வளரட்டும்.








2 comments:

  1. Prabakar....A well written article about him at the right time....Good.....I could see everyone started feeling his absence now......We should inherit some characteristics and should start practising it.....Thats the best gratitude we can do......

    ReplyDelete
  2. அப்துல்கலாம் ஐயாவிடம்
    எனக்கு பிடித்த தத்துவம்.

    உன் கை ரேகை பார்த்து

    எதிர்காலத்தை

    நம்பி விடாதே! ஏன் என்றால்

    கை இல்லாதவனுக்கும்

    எதிர்காலம் உண்டு!

    ReplyDelete