Sunday, September 21, 2014

ஓர் இரவு வாழ்க்கை...


[இந்த பதிவ படித்து முடிக்க சராசரியாக நாலு நிமிடங்கள் ஆகும் ]



நடுநிசி இரவு பன்னிரெண்டு மணி, ஆள் அரவம் இல்லாத அந்த அறையில் யாரோ தன்னை பேர் சொல்லி அழைப்பது போல் கேட்டது.

ராம்,
டேய் ராம்,
டேய் ராம் எந்திரிடா...........

சரி சரி இது ஏதோ, ராஜா ராணி....., ஒரு ஊர்ல ஒரு பெரிய........ இப்படி ஏதோ ராமு, சோமு கதைன்னு நினைக்க வேண்டாம். இது மின்னணு உபகரணங்களில் இருக்கும் வன்பொருள், மென்பொருள்களுக்கு இடையில் நடக்கும் சிறு உரையாடல்.

அய்யோ......தமிழ் பதிவுன்னு சொல்லிட்டு இப்படி எழுதுனா எப்படி புரியும் உங்களுக்கு? இதோ தமிழ்லேயே சொல்லுறேன். electronic gadgetsல்  இருக்கும் hardware மற்றும் software பேசிக்கொள்ளும் சிறு உரையாடல்.

RAM,
டேய் RAM,
டேய் RAM எந்திரிடா........

RAM :  என்னடா EEPROM, என்னைய கொஞ்ச நேரம் கூட தூங்க விட மாட்டியா? நான் உன்ன மாதிரி ஒண்ணும் வெட்டி பய கிடையாது, நேத்து fulla ஒரே வேலை.....இந்தா beer அடிச்சிட்டு தூங்கிட்டு இருக்கானே இந்த நாதாரி ஒரு program கூட விடாம எல்லாத்தையும் download பண்ணி வச்சிக்கிட்டு எல்லா programயும் நோண்டிட்டே இருக்கான். இதுல இடைல whatsapp, facebook சாட்டிங் வேற. ஒரு நிமிஷம் என்ன தூங்க விட மாட்டேங்குறான்.

EEPROM alias NVM  : சரி சரி அப்படியே சைக்கிள் கேப்ல உன் புகழ் பாடுற பாத்தியா!!! charge போயிட்டாவது நீ தூங்கிக்கலாம், ஆனா என்ன பாரு இந்த phoneஐ தூக்கி கட்டைல போறது முடிய நான் வேலை பாத்தாகணும்.

ROM alias FLASH : டேய் மாப்பிளைகளா, என்ன ஓவரா உங்க புகழாவே பாடிட்டு இருக்கீங்க, நான் இல்லன்னா அப்புறம் உங்களுக்கு எதுடா வேலை!!! எல்லா programயும் ஸ்டோர் பண்ணிட்டு நான் எவ்ளோ அமைதியா வேலை செய்றேன்.

ROM : இதுல இந்த பய புள்ள திடீர்னு எதாவது OS version மாத்துரேன்னு புது OS install பண்ணுவான் அப்புறம் factory reset பண்ணுறேன்னு எதாவது சொதப்பிட்டு திருப்பி flash பண்ணுவான்.

NVM : ஆமா அப்போ configuration சொல்லிட்டு எனக்கும்தான் வேலை இருக்கும்.


RAM: ஹலோ, எங்களையும் தான் download speed சரியல்லைன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. நான் மட்டும் speedஆ ரைட் பண்ணலைன்னா உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.


(அப்போ அங்க இன்னொரு சத்தம் கொஞ்ச கட்ட குரல்ல......என்னடா அங்க சத்தம் .....................பேசினது வேறு யாரும் இல்ல நம்ம CPU தான்)

RAM/ROM/NVM (கோரஸாக): சும்மா பேசிக்கிட்டிருந்தோம்........

RAM : ஆமா CPU ன்னா இவர் மட்டும் என்ன கொம்பா?? இவனும் நம்மள மாதிரி வெறும் memory தாண்டா!!! program counter, stack , ALU, registers அப்படின்னு வேற வேற பேர் வச்சிட்டு இருக்கான், ஆனா எல்லாமே memory தான்.

(CPU யோட கட்ட குரல் நம்ம ANDROID யும் எழுப்பி விட்டுருச்சு)

ANDROID: சரியா சொன்னடா, நீங்கல்லாம் வெறும் memory தான். உங்களுக்கு dataவ கொடுத்து உங்கள வேலை செய்ய வைக்கிறது நாங்கதான்.

NVM : அப்பு, நீ வெறும் program தான், உன்ன மாதிரி தான் windows ன்னு ஒருத்தன் பெரிய படம் போட்டுட்டு இருந்தான் இப்ப அவன் நிலைமைய பாத்தில....

ANDROID : அய்யோ, வெளிய இருக்குறவன் தான் விவரம் தெரியாம பேசுறான்னா நீயுமா?? நானோ windows, linux , iOSஓ ....இன்னும் எத்தனை programஓ......எல்லாம் compile பண்ணி build பண்ணிட்டா வெறும் zeroes and ones மட்டும்தான். நீங்க எல்லாம் அந்த zeroes and ones வச்சி output தர்ற வெறும் memory device அவ்ளோதான்.

ROM : சரி சரி இத சத்தமா சொல்லாத, அப்புறம் இந்தியாகாரன்லாம் zeroவ கண்டுபிடிச்சது இந்தியன்தான் சொல்லி ஒரு postingஅ போட்டு அதுக்கும் லைக் போட்டு நம்மள இன்னும் கொன்னு எடுப்பாங்க.

RAM/ROM/NVM (கோரஸாக):ஹா ஹா ஹா ...........

ANDROID : ஏய் அவனுங்கள லைக் வாங்குறதுக்கு மட்டும் வேலை செய்யும் ஆளுகன்னு தப்பா நினைச்சிடாத, நம்ம சொல்லுற சாதாரண zeroes and ones வச்சி எவ்ளோ achieve பண்ணிருக்காங்க தெரியுமா??

ROM : ஓ தெரியுமே!!!இந்தா  நமக்கெல்லாம் உயிர் வந்து பேசிக்கிற மாதிரி இந்த program எழுதுனது கூட மப்பு கலைஞ்சும், இன்னும் தூங்கிட்டு இருக்கனே இவன்தான் பெரிய ஆள்தாம்ப்பா.

NVM : டேய்  நம்ம பேசிக்கிற சத்தம் கேட்டு இவன் எந்திரிக்கிற மாதிரி இருக்கு.

ANDROID : அய்யோ, எதுக்கு எல்லா file யும் select பண்ணுறான்?? ஐயையோ இவன் விரல்கள் shift + del அமுக்..............


NVM: ஆ ஊ ~வ ஃ க்கோ @##$$%^&&**((((







Sunday, September 7, 2014

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்எண்னை மற்றும் தீபாவளிக்கு டால்டா வாங்கியவர்கள்;

பஞ்சாயத்து டிவில் ஒலியும் ஒளியும் மற்றும் ஹிந்தி படம் பார்த்தவர்கள்;

வருடம் முழுதும் டவுன் பஸ்ஸில் மட்டுமே சென்றாலும்  குடும்பத்துடன் துணிக்கடை செல்லும் நாட்களில் மட்டும் பந்தாவாக சைக்கிள் ரிக்சாவில் சென்றவர்கள்;

பொருட்காட்சியில் முதன்முதலாக  ஒரு சிக்கன் 65 வாங்கி குடும்பமே பங்கிட்டு சாப்பிட்டவர்கள்;

டூயுவில் சட்டர் போட்ட சாலிடர் டிவி வாங்கி, வரும் ஞாயிறு என்ன படம் என்று  சொல்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிரொலி பார்த்தவர்கள்;

ஒரு முறை  சென்னை சென்று வந்ததையே வருடம் முழுதும் பேசியவர்கள்;

எஞ்சினியரிங் என்றால் சிவில் எஞ்சினியர் மட்டுமே நினைத்தவர்கள்;

ஐந்து வருடத்திற்கு முன் எழுதி வைத்த போன் கனெக்ஷன் கிடைத்த  மகிழ்ச்சியில் எல்லா சொந்தத்துக்கும் பேசி விட்டு மாத கடைசியில் பில் வந்ததும் போனுக்கு பூட்டு போட்டவர்கள்;

மற்றும் இது போல் பலரை காணவில்லை. இவர்களிடத்தில்  காசு பணமிருந்ததில்லை அதே நேரத்தில் கவலையும் இருந்தததில்லை.

                  இவர்கள் எப்பொழுது முதல் காணாமல் போனார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. வேலை,பணம், குடும்பம் தேடுதல்  மற்றும் கால ஓட்டங்களில் காணமல் போயிருப்பார்கள் என்று சந்தேகிக்கபடுகிறது, இறுதி 90களில், மற்றும் உலகமயமாக்கல் பொருளாதர வளர்ச்சியில் காணாமல் போயிருக்கலாம் என்ற ஒரு பரவலான கருத்தும் உண்டு. இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்ற விவரமே வேலை வெட்டி இல்லாத நேரங்களில் அல்லது டிவியில் பட்டிமன்றம் பார்க்கும் போது  மட்டும்தான் தெரிய வரும். மற்ற நேரங்களில் இவர்களை தேடக்கூட ஆள் இருக்காது. இவர்களை  பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, அளவுக்கு அதிகமாக பணமிருந்தும் அதை அனுபவிக்க நேரம் கிடைக்காத(அல்லது ஒதுக்காத) எவரிடமும் தெரிவிக்கலாம்.

வீட்டிற்க்கு ரெண்டு கார் இருந்தும், அதில் குடும்பத்தோடு ஊர் சுற்ற நேரமில்லாதவனும்;
பிடித்த உணவை விட பிடிக்காத மாத்திரையை அதிகம் சாப்பிடுபவனும்;
42" இன்ச் டிவி வாங்கியும், அதை பார்க்க நேரமில்லாதவனுக்கும்தான்  இவனை கண்டுபிடிக்க வேண்டியது இப்போது அவசியமாகிறது.

                 இவர்களை தேடுவதை விடுத்து அவர்கள் தொலைந்த காலங்களை தேடுவதை விடுத்து நமது சரியான சந்தோஷம்(நிச்சயம் பணமாக இருக்காது) எது என்று தேடினாலே, தானாக இவர்கள் கிடைப்பார்கள்.