Saturday, July 4, 2015

முதல் மெட்ரோ பயணம்

முதல் மெட்ரோ பயணம்................ஓகே அப்படி பொத்தாம் பொதுவா "முதல்" மெட்ரோ பயணம்ன்னு சொல்லிற முடியாது. வேணும்ன்னா இந்தியால முதல் மெட்ரோ பயணம், ஒ ஒ ஓஓ அதுவும் சொல்ல முடியாது டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோகளிலும் தலா ஒரு பயணம் முடிந்தாகிவிட்டது, சரி முழு கட்டுமான பணிகளையும் பார்த்து பயணம் செய்த ஒரு மெட்ரோ பயணம்.

ஆம், வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார்ன்ற பழமொழிய எல்லோராலும் அனுபவிக்க முடியுதோ இல்லையோ, "மெட்ரோ கட்டுவதை பார்" இந்த வாக்கியத்தை கடந்த ஆறு வருடங்களில் சென்னையை தொடர்புடைய யாராலும் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. இந்த கட்டிட வேலைகளால் அரை கிமீ தூரத்தை கடக்க கூட அரை மணி நேரமாகிய நாட்கள், மழைக்கு ஒதுங்கி பில்லருக்கு அடியில் நின்று இதில் ஒரு track இருக்குமா அல்லது இரு track இருக்குமா போன்ற விவாதங்களை கேட்ட நாட்கள், கட்டுமான பணியின் போது நடந்த விபத்துகளால் அவ்வழி பாதைகளில் பயணம் செய்த சக பயணிகளுக்கு நடந்த கொடூர மரணங்கள், இவையல்லாமல் வெறும் துண்டு செய்திகளாக வந்த கட்டுமான அஸ்ஸாம், மற்றும் மணிப்பூர் பகுதி பணியாளர்களின் மரணங்கள், ஆட்சி மாற்றங்களுக்கு இடையில் வெகுவாக சிக்காமல் சிற்சில தடைகற்களை மட்டுமே தாண்டி வளர்ந்து கொண்டிருக்கும் மெட்ரோ, இப்படி நாம் தினமும் கேட்டு அல்லது பார்த்து வளர்ந்த மெட்ரோ சென்னை மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது என்ற செய்தியே கொஞ்சம் ஆர்வமாக தான் இருந்தது. ஒவ்வொரு வெள்ளி கிழமைகளில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கே முதல் ஷோ முதல்  ரிவ்யூ கொடுக்கணும்ன்னு இருக்கும் ஷோஸியல் மீடியாக்களின் குறிக்கோள்களுக்கு மத்தியில் இந்த மெட்ரோ ஓபனிங் ஒன்றும் விதி விலக்கல்ல. படங்களை போல் 120ரூ டிக்கெட் இல்லை அதிகமே 40ரூ தான், டிக்கெட் கெடைக்கலைன்ற பிரச்சனையே கெடையாது, இப்படி பட்ட மொக்க படத்துக்குபோய் முதல் நாளே வந்துட்டோம்ன்னு வருத்தமும் இருக்காது. இவையனைத்தும் சேர்ந்து நாமளும் மெட்ரோல போய் ஒரு செல்ஃபி எடுத்து போடணும் என்ற எண்ணம் மேலும் ஆர்வத்தை கூட்டியது. ஆலந்தூர் முதல் அசோக் பில்லர் முடிய திரும்ப அசோக் பில்லரில் இருந்து ஆலந்தூர் முடிய, பயண நேரம் பத்து நிமிடங்களுக்கு குறைவே; ஸ்டேஷன் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பராக்கு பார்த்து சென்றது ஒரு அரை மணி நேரம் எடுத்திருக்கும்.

இதற்கு முன்பு இதே போல் பராக்கு பார்த்து கொண்டே மெட்ரோவில் பயணம் செய்தது ட்யூப் என்று செல்லமாக அழைக்க படும் லண்டன் மெட்ரோவில். முதல் இரண்டு மூன்று ட்யூப் பயணங்கள் சுவாரசியமும் மிரட்சியும் கலந்ததாகவே இருந்தது; சுவாரசியம் - எப்படி இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்களை கட்டி முடித்திருப்பார்கள், எவ்வளவு காலம் எடுத்திருப்பார்கள்; மிரட்சி - வழி தவறாமல் நண்பர்களின் பின்னாலயே சென்றது, இந்த கூட்டத்தில் இவர்களை தவற விட்டால் நம்மால் திரும்ப வீடு போக முடியுமா......அடுத்தடுத்த ட்யூப் பயணங்களில் "மிரட்சி" சுத்தமாக குறைந்தாலும் சுவாரசியம் சற்றும் குறையவே இல்லை, ஒவ்வொரு வார இறுதியும் ஒவ்வொரு புது புது ரூட்களின் ட்யூப் பயணம் புதிதாகவே இருந்தது. நிலத்துக்கு அடியில் இரண்டடுக்கு tunnelக்கே விலகாத ஆச்சரியங்களுக்கு இடையில்  ஐந்தடுக்கு tunnel அந்த ஐந்தடுக்குக்கும் escalator வசதி, அதில் ஒரு சிறு பிசுறு இல்லாமல் பயணம் செய்யும் லட்சகணக்கான பயணிகள் மேலும் மேலும் சுவாரசியத்தை கூட்டும். இந்த சுவாரசியம் அகலும் முன்னே அடுத்த ட்யூப் ரூட் தேம்ஸ் நதிக்கடியில்......வருடம் முழுவதும் நீர் ஓடும் நதிகடியில் சுரங்க பாதையா, அதுவும் இதை 150 வருடங்களுக்கு முன்னரே கட்டி விட்டனர்............இவைகளுக்கிடையில் ஏனோ தேவை இல்லாமல் நம்ம ஊரின் மெட்ரோ பணிகளை ஒப்பிட்டு பார்க்கும் மனது, அப்போதுதான் சென்னை மெட்ரோவில்  அடையார் நதியை(சாக்கடையை) கடந்து செல்லும் பாதையை கட்டி கொண்டிருந்தார்கள், ஆனால் அண்டர்க்ரௌண்ட் இல்லை, நதியின் மேலே செல்லும் பாதையே. நமது நாட்டின் வளங்களை 400 வருடங்கள் சுரண்டி சென்றால் இதை விட சிறப்பாகவே கட்டி இருக்கணும் என்று தானாக சமாதானம் அடையும் மனது. 

அதே சுவாரசியம் மற்றும் மிரட்சியை நிறைய கண்களில் ஆலந்தூரிலும் பார்க்க முடிந்தது. நாங்களும் மெட்ரோ ரயில் எரிட்டோம்ல என்று வெற்றி புன்னகையோடு சில பெண்கள் கூட்டம்; 150 அடிக்கு மேல் இருக்கும் escalator அதில் பயந்து பயந்து ஏறும் பெரியவர்களின் கூட்டம்; இதோ மெட்ரோ டிக்கெட், மெட்ரோ ஸ்டேஷனில் தண்ணி குடிக்கிறேன், இந்தா ட்ரெயின் வருது, இந்த கதவு திறக்குது..............இப்படி ஒரு நிமிசத்துக்கு முன்னூறு ஸ்டேடஸ் போடும் காலேஜ் இளசுகள் கூட்டம்; முதல் மெட்ரோ பயணம்ன்றத விட என்ட்ட iphone6 இருக்குன்னு காண்பிப்பதுக்கே செல்பி எடுக்கும் corporate கூட்டமும்;  இன்ஜினியரிங் கவுன்செல்லிங் வந்திருக்கும் மிரட்சி குறையாத சில வெளியூர் மக்களும். இவர்களுக்கு இடையில் நம்மளும் blog எழுதி ரெண்டு மாசத்துக்கு மேல ஆயுடுச்சே இந்த மெட்ரோ மேட்டர வச்சி ஒரு கட்டுரையாவது எழுதிரலாம்னு திரிஞ்ச நானும் ஒருத்தன்.

இந்த பயணத்தில் புகழ்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் நாற்பதினாயிரம் பயணிகள், இந்த நாற்பதினாயிரம் பயணிகளுக்கும் முகம் சுழிக்காமல் உதவி(லிப்ட் மற்றும், escalator ஏரியாகளில்) புரியும் volunteerகள். சொன்ன வினாடிக்கு(நிமிடம் அல்ல வினாடி) சரியாக வந்து நிற்கும் ட்ரெயின், எந்த பிளாட்ஃபார்மில் எந்த வழியாக செல்லும் வண்டி வரும், அதற்க்கு எந்த வழியாக செல்ல வேண்டும் இவ்வாறு பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்கும் அறிவிப்பு பலகைகள்,  மேலும் நிறைய சொல்லி கொண்டே போகலாம். ஆனால், இவ்விசயங்களை லண்டன் ட்யூப் பயணத்தோடு கம்பேர் செய்தால், அனைத்துமே பாஸ் மார்க் கூட வாங்காது. மொத்த லண்டனில் 9ஜோன்களாக பிரித்து அதில் 11lineல் இயங்கும் ட்யூபோடு ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஆனால் நம் சென்னையில், நம் நாட்டில் நாம் இது வரை பயணம் தாம்பரம் பீச் சப்-அர்பன் ரயில், பறக்கும் ரயில் திட்டங்களோடு கம்பேர் செய்தால் இது நிச்சயம் புகழ்வதற்கு உரிய விசயமே. அதுவும் இந்த ஒரு பகுதி மட்டுமல்லாமல் முழு வேலையும் முடிவடைந்து சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை இரண்டு corridorல் அனைத்து பகுதியையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்பதான சென்னையும் அதன் போக்குவரத்தும் ன்னு மெட்ரோவ பற்றி இன்னொரு blog எழுதலாம்.



3 comments:

  1. thangal payana anupavam rasichen.

    london metro patri solli thoddu sendrathu arumai.

    ReplyDelete
  2. :)....Nice article....Buddy!!!....I was expecting your metro selfie in this artilce which you shared in our whatsapp group........Please add it in this article.......

    ReplyDelete