Saturday, November 1, 2014

வதந்தி எனும் காட்டுத்தீ

[இந்த  பதிவை படித்து முடிக்க சராசரியாக இரண்டரை நிமிடங்கள் ஆகும், படித்த படி நடக்க அதை விட குறைவான நேரமே தேவை படும்.]

இறுதி எண்பதுகளிலும், தொண்ணுறுகளின் ஆரம்பத்திலும்......அதாவது தூர்தர்ஷன் கோலோச்சிய காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையில் சிறு சிறு கார்ட்டூன் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களிடையே பரப்புவார்கள்; மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை குறைப்பது, தண்ணீரை சேமிப்பது, கிராம தூய்மையின் முக்கியம் இவ்வாறு மேலும் பல.

இவற்றில் ஒரு கார்ட்டூன், ஒரு சிறுவன் தன்னுடைய வீட்டில் பலூன் ஊதி விளையாடும் பொழுது, பலூன் வெடித்து விடும்; அதை வெளியே கேட்ட ஒரு நபர் அந்த வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக மற்றொருவரிடம் சொல்லுவார் பின் அவ்விஷயத்தை கேட்ட அந்த நபர் மற்றொருவரிடம் அந்த தெருவில் ஏதோ வெடிகுண்டு வெடித்ததாக தனது நண்பர்களிடத்தில் சொல்லுவார். அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இந்த விஷயத்தை இன்னும் பெரிது படுத்தி, ஒரு ஊரையே அழிக்க கூடிய குண்டு வெடித்ததாகவும், ஊரில் பெரிய கலவரம் நடப்பதாகவும் பலவாறாக வதந்திகளை பரப்புவார்கள். வதந்தியால் விளையும் கெடுதலை மக்களுக்கு உணர்த்துவதற்காக அமைந்த ஒரு சிறு விளக்கப்படம். இந்த கார்ட்டூன் இப்பொழுதும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தகவல் தொடர்பு உள்ளது. வெறும் வாய் வழியாகவே வதந்தி இவ்வளவு வேகமாக பரவ முடியும் போது, இன்றைய மக்கள் தொடர்பு சாதனங்களான whatzapp, facebook, twitter etc இந்த வதந்திகளை ஒளியின் வேகத்தை விட வேகமாக பரப்புகின்றன.

கடந்த வாரத்தில், ஒரு ஆடியோ பதிவு மற்றும் ஒரு பெண்ணின் போட்டோ.......... துரைப்பாக்கத்தில் திருட்டு சம்பவத்தில் அந்த பெண் ஈடுபடுவதாக வேகமாக பரவியது(இந்த பதிவு எழுதும் பொழுது அந்த ஆடியோ பதிவிக்காக மன்னிப்பு கேட்டு மறு பதிவும் வந்தது ஒரு ஆறுதல் விஷயம்). இவ்வாறான வதந்திகளுக்கு காரணம் என்னவென்றால், செய்திகளை முந்தித்தரவேண்டும் என்ற ஒரு வேகம் தான். ஒரு சிறு send button அல்லது ஒரு like அல்லது share buttonகள் இதை நமக்கு மேலும் எளிமை ஆக்கிவிடுகிறது.

இந்த வேகம் தனி மனிதனிடத்தில் மட்டும்தான் இருக்கிறதா, இல்லை சமுயாத பொறுப்புணர்வு உள்ள பத்திரிகையிலும்(தனி மனிதனை விட அதிகமாக கட்டாயம் அதிகம் இருக்கணும்) இதே வேகம் உள்ளது. மேல் சொன்ன அதே பதிவு மறுநாள் ஒரு தமிழ் நாளிதழிலும் வந்தது(அவ்விசயத்தையும் whatzapp அனுப்பினோம், பத்திரிகைகாரன் பொய் சொல்ல மாட்டன் என்று நினைத்து) . இது மட்டுமல்ல, சமீபத்திய ஒரு ஜாமீன் வழக்கின் தீர்ப்பை முழுதாக சொல்வதற்குள், செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் தவறான செய்தியை பரப்பின அனைத்து செய்தி நிறுவனங்களும்(பின் அச்செய்திகளுக்காக சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை)

செய்தி நிறுவனங்களின் அலட்சியத்தின் இன்னொரு எடுத்துகாட்டு http://www.thenewsminute.com/news_sections/1818. சரி அத விடுங்க அவங்க என்னவேனா பண்ணட்டும், நாம நம்ம sideல இருந்து இந்த மாதிரி வதந்திகளை பரப்பாமல் இருக்க சில விசயங்களை follow பண்ணாலே போதும், எந்த ஒரு விசயத்தின் நம்பகத்தன்மையில் சிறு சந்தேகம் இருந்தால் கூட அதை பரப்பாமல் இருக்கலாம், ஒரு தப்பான விஷயத்தை பகிர்வதை விட நமக்கு  தெரியாத ஒரு நல்ல விஷயத்தை பகிராமல் இருப்பதே மேல்.





2 comments:

  1. Very true. Basic reason being cheap publicity of journals and media. Individuals to realise the facts and cascade!!!

    ReplyDelete